இராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் சாலை தெருவில் உள்ள ஒரு திருமண மகாலில், கடந்த சில நாட்களாக வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஜவுளி நிறுவனத்தின் சார்பில் விற்பனை கண் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து துணிகளை தேர்வு செய்து வந்தனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை விற்பனை கண்காட்சியை திறந்த ஊழியர் மின் விளக்கை போடுவதற்காக சுவிட்ச் போட்டு உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தீப்பொறி ஏற்பட்டு துணிகளில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த தீ மளமளவென பரவியதால் அனைத்து துணிகளும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கின.
இது குறித்த தகவல் கிடைத்ததும் இராமநாதபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், உதவி கோட்ட அலுவலர் ஹக்கீம் பாட்சா, நிலைய அலுவலர் சாமிராஜ் தலைமையில் விரைந்து வந்தனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் வழுதூர் மின் நிலைய தீயணைப்பு வண்டியும் வரவழைக்கப்பட்டது.
இரண்டு தீயணைப்பு வண்டி வீரர்களும் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இருப்பினும் ரூ.10 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானதாக இதன் உரிமையாளரான தர்மபுரி மாவட்டம் தேதாம்பட்டியை சேர்ந்த கோபால் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து இராமநாதபுரம் போலீஸ் துணை சூப் பிரண்டு முரளீதரன், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை விற்பனை கண்காட்சியை திறந்த ஊழியர் மின் விளக்கை போடுவதற்காக சுவிட்ச் போட்டு உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தீப்பொறி ஏற்பட்டு துணிகளில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த தீ மளமளவென பரவியதால் அனைத்து துணிகளும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கின.
இது குறித்த தகவல் கிடைத்ததும் இராமநாதபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், உதவி கோட்ட அலுவலர் ஹக்கீம் பாட்சா, நிலைய அலுவலர் சாமிராஜ் தலைமையில் விரைந்து வந்தனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் வழுதூர் மின் நிலைய தீயணைப்பு வண்டியும் வரவழைக்கப்பட்டது.
இரண்டு தீயணைப்பு வண்டி வீரர்களும் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இருப்பினும் ரூ.10 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானதாக இதன் உரிமையாளரான தர்மபுரி மாவட்டம் தேதாம்பட்டியை சேர்ந்த கோபால் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து இராமநாதபுரம் போலீஸ் துணை சூப் பிரண்டு முரளீதரன், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments