கழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்
பூந்தமல்லி:
கள்ளக்காதலனுடன் பெங்களூரில் குடும்பம் நடத்த திட்டமிட்டு கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ததாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரவாயல் அருகே நேற்று முன்தினம் கழுத்து அறுக்கப்பட்டு எலக்ட்ரிஷன் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி வித்யாவை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் என்று போலீஸ் தரப்பில் கூறியதாவது:
வித்யா வேலை பார்த்த கம்பெனியில் செய்யாறை சேர்ந்த மகாலாட்சுமி வேலை பார்த்துள்ளார். மகாலட்சுமியிடம் அவரது மகன் மணிகண்டன் பெங்களூரில் இருந்து அடிக்கடி செல்போன்மூலம் பேசுவது வழக்கம். அப்போது ஒரே ஊர் என்பதால் வித்யாவிடமும் மணிகண்டன் பேசுவார்.
தான் பெரிய மருத்துவமனையில் வேலை பார்ப்பதாகவும், நல்ல வசதியுடன் இருப்பதாகவும் கூறுவார். இதை நம்பிய வித்யா, செய்யாறில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதாக ராஜகுமாரிடம் கூறிவிட்டு, பெங்களூர் சென்று மணிகண்டனுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம்.
தான் பெரிய மருத்துவமனையில் வேலை பார்ப்பதாகவும், நல்ல வசதியுடன் இருப்பதாகவும் கூறுவார். இதை நம்பிய வித்யா, செய்யாறில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதாக ராஜகுமாரிடம் கூறிவிட்டு, பெங்களூர் சென்று மணிகண்டனுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம்.
மேலும், கடந்த 6 மாதத்துக்கு முன் மணிகண்டன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போதும், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, மருத்துவமனைக்கு சென்று மணிகண்டனை கவனித்து வந்துள்ளார். டாக்டர், நர்ஸ்களிடம் மணிகண்டனின் மனைவி என்று கூறியுள்ளார்.
இதை அறிந்த ராஜ்குமார் மனைவி வித்யாவை கண்டித்தார். தினமும் மது அருந்திவிட்டு வித்யாவை அடித்து உதைத்துள்ளார்.இந்த சம்பவங்களை மணிகண்டனிடம் கூறி, ராஜ்குமார் இருக்கும் வரை நாம் ஒன்றாக இருக்கமுடியாது. அவனை தீர்த்து கட்டுங்கள். இருவரும், பெங்களூரில் குடும்பம் நடத்தலாம் என்று கூறியுள்ளார்.
இதை அறிந்த ராஜ்குமார் மனைவி வித்யாவை கண்டித்தார். தினமும் மது அருந்திவிட்டு வித்யாவை அடித்து உதைத்துள்ளார்.இந்த சம்பவங்களை மணிகண்டனிடம் கூறி, ராஜ்குமார் இருக்கும் வரை நாம் ஒன்றாக இருக்கமுடியாது. அவனை தீர்த்து கட்டுங்கள். இருவரும், பெங்களூரில் குடும்பம் நடத்தலாம் என்று கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து மணிகண்டன் தனது நண்பன் செய்யாறை சேர்ந்த பிரபல ரவுடி துரையை அணுகி உள்ளார்.சம்பவத்தன்று இரவு போதையில் தூங்கிக்கொண்டிருந்த ராஜ்குமார் குறித்து மணிகண்டனுக்கு வித்யா தகவல் கொடுத்தார்.நண்பர்கள் துரை, கிரிதரன், சரவணன், செந்தில், பெருமாள் ஆகியோருடன் சேர்ந்து ராஜ்குமாரை மணிகண்டன் கொலை செய்துள்ளார்.
அதற்கு கூலியாக 15 சவரன் நகையை வித்யா கொடுத்துள்ளார் என தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இதையடுத்து வித்யா, மணிகண்டன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
0 comments