17 February 2014

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் குடிநீருக்கு அல்லல்படும் கிராம மக்கள்

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் குடிநீருக்கு அல்லல்படும் கிராம மக்கள்


இராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே குடிநீருக்காக பல ஆண்டு களாக அல்லல் பட்டு வரும் கிராம மக் கள் இதுபற்றி கலெக் டரை சந்தித்து மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி விசுவநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆர். எஸ்.மங்கலம் யூனியன் கொட்குடி ஊராட்சி கானாட்டாங்குடி கிராம தலைவர் கணேசன் தலைமையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் சுமார் 450க்கும் மேற்பட் டோர் குடியிருந்து வருகி றோம். கடந்த காலங்களில் ஏ.ஆர்.மங்கலம் கூட்டு குடி நீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கியதும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது.

மேலும் எங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப் படவில்லை. இதனால் நாங் கள் கடந்த 3 ஆண்டுகளாக பல மைல் தூரம் நடந்தே சென்று தண்ணீர் எடுத்து வந்து குடிக்க பயன்படுத்தி வருகிறோம். தற்போது ஆவ ரேந்தல் கிராமத்தில் இருந்து தனியார் லாரி மூலம் தண் ணீர் விற்பனை செய்து வரு கின்றனர். இந்த தண்ணீரை ஒரு குடம் ரூ.5 விலை கொடுத்து வாங்கி பயன்ப டுத்தி வருகிறோம். தண்ணீருக் காக பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எங்கள் கிராமத்தின் அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தூரத் தில் கடல் உள்ளதால் கடல் நீர் நிலத்தடியில் புகுந்து குடி நீர் உப்புத்தன்மையாக மாறி விட்டது. எனவே எங்கள் கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வசதி செய்து தரவேண்டும். இல்லாவிட்டால் நாங் கள் அனைவரும் கிராமத்தை காதலி செய்து விட்டு கலெக் டர் அலுவலகத்தில் குடியேற முடிவு செய்துள்ளோம். இவ் வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இடிந்த கட்டிடம்


இராமநாதபுரம் நகர் மூலக் கொத்தளம் நண்பர்கள் சங் கத்தின் சார்பில் அதன் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் ஏராளமானோர் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியில் வீட்டுவசதி வாரியத் தின் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அதன் உறு தித்தன்மை குறைந்து சேதமடைந்து விட்டதால் இதில் குடியிருந்த அனைவரையும் காலி செய்து விட்டனர். இந்த நிலையில் இடிந்தகட்டிடங் களை அப்புறப்படுத்தாமல் உள்ளதால் அவை எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த குடியிருப்பு பகுதி வழியாகத்தான் பொது மக்களும், அருகில் உள்ள பள்ளிக் கூடத்துக்கு மாணவ-மாணவி களும் சென்று வருகின்றனர். மேலும் இந்த கட்டிடத்திற்குள் சட்ட விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சேதமடைந்த குடியிருப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நந்தகுமார் இது பற்றி உரிய நடவ டிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top